AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Wednesday 29 January 2014

HEARTY WELCOME TO SHRI. T. MURTHY, CHIEF PMG, TN CIRCLE

நமது  தமிழ் மாநில புதிய C P M G ஆக பதவியேற்கவுள்ள  திரு.T.மூர்த்தி IPS அவர்களை இனிதே வரவேற்கிறோம் !

Ms.  Indu Gupta,  CPMG , TN Circle  is transferred   as CPMG,  Madhya Pradesh Circle  and 

Shri. T.Murthy, CPMG,Assam Circle  is transferred and posted as CPMG, TN Circle .

Monday 27 January 2014

தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலக வாயில்களிலும் 28.01.2014 அன்று ஆர்ப்பாட்டம் !

JCA
NFPE - FNPO

அன்பார்ந்த  தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே ! உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள்  !

 கடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த  முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில்  நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014  அன்று   திருச்சி , மதுரை  மற்றும் கோவை  மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

CPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்                 
அதேபோல, 28.01.2014 அன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம்  முன்பாக  தமிழக JCA சார்பில்  NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டமும் ,  தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற  உள்ளது. 

எனவே சென்னை பெருநகரத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின்  தோழர்களும் தோழியர்களும்  பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு  இந்த நிகழ்வை  சிறப்பிக்க வேண்டுகிறோம். 

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை  முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் . 

எனவே  சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின்  செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.

தமிழகத்தின் அனைத்து தலைமை 
அஞ்சலக வாயில்களிலும் ஆர்ப்பாட்டம் 

அதேபோல , சென்னை பெருநகர் தவிர  தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ  அல்லது மாலை வேளையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும்.  ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி  இந்த ஒற்றுமையை  கட்டிட வேண்டும்.

மேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை  அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல்  வெளியிடப்பட வேண்டுகிறோம்.

 'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில்  செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன.  பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே  தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.

இந்தப் போராட்டத்தை  ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். 
                                        
50%  சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
                                                                                                     
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
                                                                                                                     
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் 
நிச்சயம் கொண்டு வருவோம் !
                                                                                                              
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
                                                                                                                                                
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
                                                                                                            
1.1.2004 க்குப்  பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே 
நிச்சயம் பெறுவோம் !
                                                                                                                                                   
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
                                                                                                                                           
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத 
நேரடி மருத்துவம்  பெறுவோம் !
                                                                                                                                                        
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
                                                                                                                                               
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
                                                                                                                                                 
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
                                                                                                                                  
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
                                                                                                                                                
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
                                                                                                                           
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
                                                                                                                                                                
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை 
தடுத்து நிறுத்திடுவோம் !  

இவையெல்லாம் பெறவேண்டுமா ? ஒன்று பட்டு போராடினால் மட்டுமே  இவையெல்லாம் சாத்தியம் .
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித  அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியானால்  அதற்கு முன்னர் நாம்  ஒன்று பட்டு 
நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு 
சென்றிட வேண்டும்  அல்லவா ?
அதற்கு  மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் 
போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா ?

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல்  என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை ! 

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் ! 
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

J. இராமமூர்த்தி                                                                          G.P. முத்துக்கிருஷ்ணன் 
கன்வீனர் , NFPE இணைப்புக் குழு .              கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,
                                                                 JCA, தமிழ் மாநிலம்

Sunday 26 January 2014

அடுத்த 20 மாதங்களில்
3,000 ஏ.டி.எம்.களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம்

    அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.


    அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், “சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5-ந் தேதி மூன்று ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்படும். இதன் பிறகு படிப்படியாக ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சேமிப்பு திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ.6.05 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்ட முதலீட்டில் 50 சதவீதமாகும். அதேசமயம், தனியார் துறையில் முன்னிலை வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.


     இந்திய அஞ்சல் துறைக்கு 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீத கிளைகள் கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தற்போது காசோலை வசதியும் வழங்கப்படுகிறது.


வங்கிச் சேவை

      வங்கிச் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த வகையில் இந்தியாவிலேயே அஞ்சல் துறைக்குத்தான் அதிக ஒருங்கிணைப்பு வசதி உள்ளது. புதிதாக வங்கிச் சேவையில் களமிறங்குவதற்காக பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அஞ்சல் துறையும் ஒன்றாகும். இச்சேவையில் ஈடுபடுவதற்கு தேவைப்படும் ரூ.623 கோடி நிதியைப் பெற நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற அஞ்சல் துறை முயற்சித்து வருகிறது.

--இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Friday 24 January 2014

CHENSPEX 2014, District level Philatelic Exhibition will be organised at Chennai - 25th - 26th January 2014.

Written By Admin on January 24, 2014 | Friday, January 24, 2014


Chennai City South Division of India Post will organise a district level Philatelic Exhibition 'Chenspex 2014' at Chennai. Philatelic workshop and quiz will also be organised during the exhibition. A special cover will also be released on 25th January 2014.

Date: 25th - 26th January, 2014

Venue: Dr. MGR Janaki College of Arts and Science for Women, No. 11 & 13 Durgabai Deshmukh Road, Opp. Andhra Mahila Sabha, Rajah Annamalaipuram, Chennai - 600 028.

Thursday 23 January 2014

Information and FAQ on CBS



To view information on CBS, please CLICK HERE


To view question/answer, please CLICK HERE



Source : http://www.indiapost.gov.in/

Monday 20 January 2014

வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தம் !!

TN JCA DECISIONS ON 12-13 FEB. 2014 - 48 HOURS STRIKE ANNOUNCED BY NFPE AND FNPO

ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 
 48 மணி நேர வேலை நிறுத்தம் !

அன்பான  NFPE  சம்மேளனத்தின் அனைத்து உறுப்புச் சங்கங்களின்  தமிழ் மாநிலச் சங்க நிர்வாகிகளே, கோட்ட/ கிளைச் செயலர்களே ! உங்கள் அனைவருக்கும் தமிழக அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக போராட்ட வணக்கங்கள் !

NFPE   மற்றும் FNPO சம்மேளனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள  பிப்ரவரி  12-13, 2014 தேதிகளில் நடைபெறவிருக்கும் 48 மணி நேர வேலை நிறுத்தம் சிறப்பாக  தமிழகத்தில் நடத்துவது குறித்து முடிவுகள் எடுத்திட , நேற்று (17.01.2014) மாலை சுமார் 06.00 மணியளவில் , தமிழகத்தின் NFPE  மற்றும் FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்கள் அடங்கிய  JCA   வின் கூட்டம்  சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது . 

கூட்டத்திற்கு தமிழக NFPE   மற்றும் FNPO சம்மேளனத்தின் அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் கன்வீனர்களான  தோழர். J .  இராமமூர்த்தி  மற்றும் தோழர். G .P.முத்துக்கிருஷ்ணன்ஆகிய இருவரும் கூட்டாக  தலைமை யேற்று நடத்தினர். 

அனைத்து  மாநிலச் செயலர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு தங்களை கருத்துக்களை எடுத்துரைத்தனர் . கூட்டத்தில் இறுதியாக கீழ்க் கண்ட முடிவுகள்  ஏகமனதாக எடுக்கப்பட்டன. 

1.   எதிர்வரும் 25.01.2014 சனிக்கிழமை மாலை,  சென்னை பெருநகர மண்டலம் நீங்கலாக , இதர மண்டலங்களான  திருச்சி, மதுரை, கோவை ஆகிய மண்டலத் தலைமையகங்களில்,  மண்டல அளவிலான வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் நடத்துவது  என்றும்,

   அந்தந்த மண்டலங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும்  மண்டலத் தலைமையகத்தில் உள்ள கோட்டங்களின் செயலாளர்கள் JCA வாக இணைந்து ,   இந்த வேலை நிறுத்த ஆயத்தக்  கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது . இதில் கலந்துகொள்ளும்  மாநிலச் செயலர்கள்  விபரம்  வருமாறு :-

திருச்சி மண்டலம் 

தோழர்கள் 
J .  இராமமூர்த்தி , மாநிலச் செயலர் P 3, NFPE 
P . குமார், மாநிலச் செயலர், R 3, FNPO 
K . ராஜேந்திரன், மாநிலச் செயலர் ,R 4,  NFPE
R . தனராஜ், மாநிலச் செயலர், GDS , NFPE 
P . கோதண்டராமன், GDS , FNPO 

மதுரை மண்டலம் 

தோழர்கள் 
G .P . முத்துகிருஷ்ணன், மாநிலச் செயலர், P 3, FNPO 
K . சங்கரன், மாநிலச் செயலர், R 3, NFPE 
S . அப்பன்ராஜ் , மாநிலச் செயலர், NFPE , SBCO 

கோவை மண்டலம் 

தோழர்கள் 
கோபு  கோவிந்தராஜன் , மாநிலச் செயலர், P 4, NFPE 
K . குணசேகர் , மாநிலச் செயலர் , P 4, FNPO 
A . ரகுபதி உமாசங்கர் , மாநிலச் செயலர் , ADMIN , NFPE 

2.      எதிர்வரும்  28.01.2014  செவ்வாயன்று சென்னை பெரு நகர்ப்பகுதியில் உள்ள கோட்ட/ கிளைகளின்  தோழர்களை ஒருங்கிணைத்து CPMG  அலுவலக  வளாகத்தில்  மதியம் 12.00 மணியளவில்  கோரிக்கைகளை வலியுறுத்தி JCA  சார்பாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் எனவும், 

      வேலை நிறுத்தத்திற்கான சம்மேளனங்கள்  21.01.14 அன்று அளிக்கும் நோட்டீஸ்  நகலை  CPMG  அவர்களுக்கு அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு அளிப்பது  எனவும் ,

        எதிர்வரும் 28.01.2014 அன்று அதே நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சென்னை பெருநகர் நீங்கலாக ,  சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள இதர கோட்ட/ கிளைகள் மற்றும்  தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடத்திட வேண்டும் என்றும், 21.01.2014 இல் அளிக்கப்படும் சம்மேளன  வேலை நிறுத்த நோட்டீஸ் நகலை நிர்வாகத்திற்கு  அந்தந்த கோட்டங்களில் அளிப்பது  என்றும் தீர்மானிக்கப் பட்டது .

3.      சென்னை பெருநகர மண்டலத்தின்  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் எதிர்வரும் 10.02.2014 திங்கள் அன்று மாலை 06.00 மணியளவில் JCA சார்பாக CPMG  அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL  அல்லது அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில்  நடத்துவது என்றும் இதில் அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொள்வது என்றும் முடிவு எடுக்கப் பட்டது .

4.    தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள JCA வின் மாநிலச் சங்க/ அகில இந்திய சங்க/ சம்மேளன நிர்வாகிகளை அழைத்து சிறப்புக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும் , கோரிக்கைகளை விளக்கியும் , இதற்கான நோட்டீஸ் உம் அந்தந்த கிளைகளில் இருந்து தனித்தனியே  அனைத்து ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டும் என்றும்  தீர்மானிக்கப் பட்டது. இதன் நகல் மாநிலச் சங்கங்களுக்கு  அனுப்பப் படவேண்டும்  என்றும் கோரப் பட்டது.

5.   கோரிக்கைகள்  மற்றும் சிறப்புக் கூட்டங்கள் குறித்து  தமிழக JCA  சார்பில்   சுவரொட்டிகள்  மற்றும்  நோட்டீஸ்  வெளியிடுவது  என்றும் தீர்மானிக்கப்பட்டது .  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி கோரிக்கைகளை வென்றிட  அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது .

இந்த செய்திகளைத் தாங்கி  நோட்டீஸ்  கிடைப்பதில் தாமதம் ஏற்படின்  அதற்காக  உங்கள்  வேலைகளை  ஒத்தி வைத்திட வேண்டாம் என்றும் , இந்த வலைத்தள செய்தியை பார்த்த உடனே  இதற்கான ஏற்பாடுகளை உடன் செய்திட வேண்டும் எனவும்   தமிழக JCA  சார்பில் கோருகிறோம். இந்த செய்தியை பார்த்த  நிர்வாகிகள்  பார்க்காத  இதர நிர்வாகிகளுக்கு உடன்  தெரிவித்து செயலாற்றிட வேண்டும் என்றும்  வேண்டுகோள் அளிக்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன் 
J .  இராமமூர்த்தி , கன்வீனர் ,
அஞ்சல்  - RMS  -MMS- GDS  இணைப்புக் குழு , 
தமிழ் மாநிலம் .
=========================================
குறிப்பு :-

பிப்ரவரி 12-13, 2014  -   48 மணி நேரவேலை நிறுத்தம் அனைத்து மத்திய அரசு ஊழியர் பகுதிகளிலும்  அறிவிக்கப்பட்டு  நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே இந்த வலைத்தளத்தின் மூலம் தொடர்ந்து  உங்களுக்குத் தெரிவித்து வருகிறோம். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் தமிழகத்தில்  பல இடங்களில் வேலை நிறுத்த  பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தி தமிழக மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன அறிக்கை வாயிலாக உங்களுக்கு கிடைக்கும்.

ஏற்கனவே நாம் அறிவித்தபடி நடைபெற இருந்த கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது . கீழே காண்க :-

எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்     
 தமிழக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்   சார்பாக  
சென்னை எழும்பூர் SRMU  அலுவலகக் கட்டிடமான நக்கீரன் அரங்கத்தில் 
வேலை நிறுத்த  விளக்கக் கூட்டம்  நடைபெற உள்ளது . 

இதில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது  பொதுச் செயலருமான  
தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் 
கலந்துகொண்டு வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும்  முன் கூட்டியே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .

 சென்னை  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  பெருவாரியான தோழர்கள்  இந்தக் கூட்டத்தின்  தவறாமல் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் !

தோழமையுடன்
J . இராமமூர்த்தி 
மாநிலத் தலைவர் 
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் 
தமிழ்நாடு .
===================

Monday 6 January 2014

Expected DA from Jan 2014 - Additional DA from Jan 2014 likely to hike by 11%

The one more and another additional Dearness allowance to Central Government employees and Pensioners from Jan 2014 will be announced in the middle of March 2014. 


This is too early and predict the enhancement in percentage of Dearness allowance with effect from January 2014. The prediction and announcement of this hike make us cool, that the additional DA will jump to 101% and another word, an additional DA would be 11%. 

But, still we have to wait for one more month, that the magic number of AICPIN would be increased by 3% and more..! From the existing level of the AICPIN is now 243, if it becomes 246 in end of December 2013, out prediction will be right…or otherwise certainly we would cross century in total Dearness allowance… 

The table describes the prediction of additional DA from Jan 2014…

MonthYearAICPIN (IW) BY 2001=100Points Increasing in AICPIN TotalAverageApp. DADA
Jun201323132648220.6790.6290
Jul201323542671222.5892.28
Aug201323722694224.593.93
Sep201323812717226.4295.59
Oct201324132741228.4297.32
Nov201324322766230.599.12
Dec2013Expected 24632793232.75101.06
101

Wednesday 1 January 2014

CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS                             
  1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001
                 ***************************************************************************
MASS DHARNA ON 9thJANUARY 2014

DAY LONG MASS DHARNA BY NATIONAL LEADERS OF CONFEDERATION AND ALL AFFILIATED ORGANISATIONS
VENUE: PARLIAMENT STREET, JANTAR MANTAR, NEWDELHI
TIME   : 10 AM to 5 PM
JOIN en-masse & MAKE IT A GRAND SUCCESS

DEMANDS:
1.     Accept the terms of reference of 7th CPC, submitted by the staff side, National Council JCM.
(a)  To examine the existing structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits like Pension, Gratuity, other terminal benefits of various categories of Central Government Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)  To work out the comprehensive revised pay packet for the categories of Central Government employees including GDS as on 1.1.2014.
(c)  The Commission shall determine the pay structure, benefits, facilities, retirement benefits etc. taking into account the need to provide minimum wage with reference to the recommendation of the 15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement of the honourable Supreme Court there-on, as on 1.1.2014.
(d) To determine the Interim Relief needed to be sanctioned immediately to the Central Government employees including GDS.
(e) To determine the percentage of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including GDS.
(f)    To settle the anomalies raised in various fora of JCM.                                                   
(g)  To work out the improvements needed to the existing  retirement benefits, like pension, death cum retirement gratuity, family  pension and other terminal or recurring  benefits maintaining parity amongst past, present and future pensioners and family pensioners including those who entered service on or after 1.1.2004.
(h) To recommend methods for providing cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners including Postal pensioners.

2.      Ensure every five year revision of wages of Central Government Employees in future.
3.(a) Regularisation of Gramin Dak Sevaks of the Postal Department and grant of Civil Servant status, statutory pension and all other benefits at par with regular employees.
   (b) Regularisation and revision of wages of casual and contract workers.
4.      Compassionate appointment – removal of restrictions imposed by Government.
5.      JCM and Anomaly Committee Functioning.
6.      Fill up all vacant posts and creation of new posts wherever justified.
7.      Stop downsizing, outsourcing, contractorisation and privatization of Government functions.
8.   Stop the move to introduce performance related Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.     Revise OTA and Night Duty Allowance rates and clothing rates.
10.  Implement arbitration awards.
11.  Five promotions to all.
12.  Rescind the PFRDA Act. Ensure statutory Pension for all.
13.  Stop price rise. Revive and extend public distribution system for all.
14.  Stop trade Union victimization.
15.  Ensure Right to strike.