AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Sunday 24 August 2014

அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராகதமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்!

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  



நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை. 

இவரது பணி  சிறக்க  நம் தென் சென்னை கோட்ட  அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 





No comments:

Post a Comment